×

அசோகபுரம் ஊராட்சி பகுதியில் குப்பை கிடங்கில் பரவிய தீயால் வீடுகளை சூழ்ந்த புகை மண்டலம்

பெ.நா.பாளையம், ஜூன் 18: அசோகபுரம் ஊராட்சி பகுதியில் குப்பை கிடங்கில் பரவிய தீயால் வீடுகளை சூழ்ந்த புகை மண்டலம் அப்பகுதியினரை பெரும் அவதிக்கு உள்ளாக்கியது. தொடர்ந்து, விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீ பரவாமல் அணைத்தனர். கோவை துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சி பகுதியில், குப்பை கிடங்கில் பிடித்த தீயை வீரர்கள் அணைத்தனர். கோவை துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சியில் 15 வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை 5-வது வார்டு லட்சுமிநகர் பகுதியில் உள்ள ரயில் பாலத்தின் அருகே ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கொட்டப்பட்டு வருகிறது. மலைபோல குவிந்து கிடக்கும் குப்ப கிடங்கில் மர்ம நபர்கள் அடிக்கடி தீ வைத்து விடுவதால் அந்த பகுதி முழுவதும் புகை சூழ்ந்து கொள்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த குப்பை கிடங்கை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் குப்பை கிடங்கு திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. குப்பை கிடங்கின் அருகே உள்ள தனியார் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கவுண்டம்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் 3 வண்டிகளில் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து நெருப்பை அனைத்து புகையை கட்டுப்படுத்தினர். இதையடுத்து, அடிக்கடி நடக்கும் குப்பையில் தீப்பிடிக்கும் பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அசோகபுரம் ஊராட்சி பகுதியில் குப்பை கிடங்கில் பரவிய தீயால் வீடுகளை சூழ்ந்த புகை மண்டலம் appeared first on Dinakaran.

Tags : Ashokapuram panchayat ,B.N. Palayam ,
× RELATED திருமணமான மூன்றே மாதத்தில் பெற்றோருடன் புதுப்பெண் தற்கொலை