×

காலை, மாலை வேளைகளில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

வத்திராயிருப்பு, ஜூன் 15: வத்திராயிருப்பில் உள்ள பள்ளிகளில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்க வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை, மாலை நேரங்களில் போதிய பஸ்கள் இல்லாததால் படிகளில் தொங்கிக் கொண்டு சிரமப்பட்டு பயணிக்கின்றனர். எனவே கிராம பகுதிகளில் இருந்து வத்திராயிருப்புக்கு கூடுதல் அரசு பஸ் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெற்றோர்கள் கூறுகையில், கிராமபுறங்களில் இருந்து காலையில் வத்திராயிருப்பு பள்ளிகளுக்கு அரசு பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் படிக்கட்டுகளில் ஆபத்து என்று தெரிந்தும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே போன்று மாலை நேரத்திலும் வீடுகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்து செல்ல வேண்டி நிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை நேரங்களில் கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காலை, மாலை வேளைகளில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Varaiyiru ,Vadruyiru ,Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...