×

அடங்காத அக்னி வெயில்

 

விருதுநகர், ஜூன் 15: அக்னி வெயில் முடிந்தும் தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் குறையவில்லை. விருதுநகர் மாவட்டத்தில் வெயில் கொளுத்துவதால் மக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். வெயில் தாக்கம் காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

இதனால் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை பள்ளிக்கு சென்ற சிறுவர், சிறுமியர் மதியம் வீடு திரும்பும்போது வெயிலால் கடும் அவதியடைந்தனர். வெயில் காரணமாக சாலையோரங்களில் இளநீர், நுங்கு, பதநீர், கரும்புச்சாறு வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

The post அடங்காத அக்னி வெயில் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Tamil Nadu ,Virudhunagar district ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...