×

குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்; மோசடி வழக்கில் சிக்க வைக்க பினராயி விஜயன் சதி: கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் பேட்டி

திருவனந்தபுரம்: கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், மோசடி பேர்வழி மோன்சன் என்பவருக்கு டெல்லியில் உள்ள சிக்கல்களை தீர்க்க பணம் வாங்கியதாக கேரள போலீசில் சிலர் புகார் கொடுத்தனர். புகார் கொடுத்து நீண்ட நாட்கள் ஆன நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சுதாகரன் மீது குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு தொடர்பாக இன்று கொச்சியிலுள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும் அவரை கைது செய்ய ஆலோசிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் எர்ணாகுளத்தில் சுதாகரன் அளித்த பேட்டியில், ‘‘மோசடி வழக்கில் என்னை சிக்க வைக்க பினராயி விஜயன் சதி செய்துள்ளார். குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு நான் ஆஜராக மாட்டேன். இந்த வழக்கை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன்’’ என்றார்.

The post குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்; மோசடி வழக்கில் சிக்க வைக்க பினராயி விஜயன் சதி: கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Pinarayi Vijayan ,Kerala State Congress ,President ,Sudhakaran ,Thiruvananthapuram ,Delhi ,Monson ,President Sudhakaran ,
× RELATED ரகசிய வெளிநாட்டு பயணம் முடித்து கேரளா திரும்பினார் பினராய் விஜயன்