×

குளங்களில் பிளாஸ்டிக், இறைச்சி கழிவு அதிகரிப்பு

 

கோவை, ஜூன் 12: கோவை நொய்யல் நீராதாரத்தில் 28 குளங்கள், 20 தடுப்பணைகள் உள்ளன. நகரில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நரசாம்பதி, செல்வாம்பதி உட்பட 9 குளங்கள் பராமரிப்பிற்காக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் இருந்து மாநகராட்சி நிர்வாகம் நரசாம்பதி, செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி, முத்தண்ணகுளம், செல்வசிந்தாமணி, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம் போன்றவற்றை பராமரித்து வருகிறது. இந்த குளங்களில் பல முறை ஆகாய தாமரை அகற்றப்பட்டது.

முத்தண்ண குளம், குறிச்சி குளம், நரசாம்பதி, செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி குளத்தில் ஆகாய தாமரை அகற்ற பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது செல்வசிந்தாமணி, கிருஷ்ணாம்பதி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளத்தில் ஆகாய தாமரைகள் அதிகமாகிவிட்டது. ஆகாய தாமரைகளை அகற்றாமல் விட்டதால் துர்நாற்றம் வீசுகிறது. குளத்தில் நீர் கெட்டு போய் நிறம் மாறி விட்டது. சில இடங்களில் கருப்பு நிறமாக நீர் காட்சியளிக்கிறது. பெரியகுளம், வாலாங்குளத்தில் மழை நீர் தடுக்கப்பட்டு சாக்கடை நீர் மட்டுமே விடப்பட்டதால், கருப்பு நிறத்தில் நீர் தேக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

வறட்சி அதிகரித்த நிலையில் செல்வசிந்தாமணி, பெரியகுளம், வாலாங்குளத்தில் முழு அளவில் சாக்கடை நீர் திருப்பி விடப்பட்டுள்ளது. கழிவு நீர் பண்ணைக்கு செல்ல வேண்டிய கழிவு நீர் குளங்களுக்கு செல்லும் நிலைமை இருக்கிறது. பெரிய குளம், வாலாங்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி குவியலாக கொட்டப்படுகிறது. வாய்க்காலிலும் பிளாஸ்டிக் குப்பைகள் அடைபட்டு இருப்பதால் அசுத்த நிலை காணப்படுகிறது. இவற்றை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

The post குளங்களில் பிளாஸ்டிக், இறைச்சி கழிவு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Noyal reservoir ,Public Works Department ,Dinakaran ,
× RELATED தென்காசி குற்றாலத்தில் உள்ள 2 அருவிகளை...