×

இம்ரான் கானுக்கு எதிராக 3 வாரத்தில் சட்ட நடவடிக்கை: பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மே 9ம் தேதி கலவரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் 3 வாரங்களில் தொடங்கும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தோஷகானா ஊழல் வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜரான இம்ரான் கானை துணைராணுவ படையினர் கடந்த மே மாதம் 9ம் தேதி(செவ்வாய்கிழமை) கைது செய்தனர்.

இம்ரான் கான் கைதை கண்டித்து பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தொண்டர்களும், இம்ரான் கான் ஆதரவாளர்களும் நாடு முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்டனர். லாகூரில் உள்ள ராணுவ தளபதி வீடு மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் வீடுகளும் சூறையாடப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்கள் ராணுவ நீதிமன்றங்களில் விசாரிக்க பாகிஸ்தான் அமைச்சரவை மே 20ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இம்ரான் கான் மீதான சட்ட நடவடிக்கைகள் அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்குள் தொடங்கும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனவுல்லா கூறியுள்ளார்.

The post இம்ரான் கானுக்கு எதிராக 3 வாரத்தில் சட்ட நடவடிக்கை: பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Pakistan ,Islamabad ,Interior Minister ,Dinakaran ,
× RELATED தாய்லாந்தில் பாங்காக் அருகே ஓடும்...