×

கழுகுமலை அருகே கார் மோதி வாலிபர் பலி

கழுகுமலை, மே 30: கழுகுமலை அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். கோவில்பட்டி தாமஸ் நகர், என்ஜிஓ காலனியை சேர்ந்த வேல்முருகன் மகன் சுகுமார் என்ற சங்கர் (22). இவர், கழுகுமலையில் நேற்று முன்தினம் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நள்ளிரவு 12 மணிக்கு மேல் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு புறப்பட்டு சென்றார். காலாங்கரைப்பட்டி விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த காருடன் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் படுகாயமடைந்த சங்கரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சங்கர் உயிரிழந்தார். இதுகுறித்து, கழுகுமலை போலீசார் வழக்கு பதிந்து, கார் ஓட்டுநர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த தினேஷ்(39) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கழுகுமலை அருகே கார் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Kalgukumalai ,Kovilpatti Thomas ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்