×

தஞ்சாவூர் ஈஸ்வரி நகர்- ரெட்டிப்பாளையத்தில் குண்டும், குழியுமான சாலையால் வாகனஓட்டிகள் கடும் அவதி

 

தஞ்சாவூர், மே 23: தஞ்சாவூர் ஈஸ்வரி நகரில் இருந்து ரெட்டிப்பாளையம் செல்லும் சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழைக் காலங்களில் மழைநீர் சாலையில் தேங்குகிறது. கடந்த வாரம் பெய்த மழையில் பள்ளங்கள் முழுவதும் தெரியாதவாறு தண்ணீர் முழுகி இருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சாலையில் மிகவும் ஆபத்தான முறையில் செய்கின்றனர். வாகன ஒட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். சாலை நடுவே பள்ளங்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தஞ்சாவூர் ஈஸ்வரி நகர்- ரெட்டிப்பாளையத்தில் குண்டும், குழியுமான சாலையால் வாகனஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Thanjavur Iswari Nagar- Reddipalayam ,Thanjavur ,Thanjavur Iswari Nagar ,Redtipalayam ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மேம்பாலத்தில் அடுத்தடுத்து...