×

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

பல்லடம், மே 20: பல்லடத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் பல்லடம் கிளை சார்பில் பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். இதில், நிர்வாகிகள் அங்குராஜ்,வடுகநாதசாமி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், ஜெயராஜ், சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Palladam ,Power Board Employees' Association ,Tamil Nadu ,Power Board ,Dinakaran ,
× RELATED தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரிப்பு