- போடிப்பட்டி ஊராட்சி
- உடுமலை
- முதல் அமைச்சர்
- Bodipatti
- Periyapatti
- கூனஞ்சேரி
- சின்னவீரப்பட்டி
- ஆணையாளர்
- ஜஸ்வந்த் கண்ணன்
- அமைச்சர்
- முகாம்
உடுமலை, ஜூலை 25: போடிப்பட்டி, பெரியபட்டி, குறுஞ்சேரி, சின்னவீரம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் போடிப்பட்டியில் நேற்று நடந்தது. கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். அவர்களின் மனுக்கள் மீது அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்று உடனடி நடவடிக்கை எடுத்தனர். வருமான சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த ஒரு பெண்ணுக்கு முகாமிலேயே சான்றிதழ் வழங்கப்பட்டது.
முகாமில் ஒன்றிய திமுக செயலாளர்கள் செந்தில்குமார், மெய்ஞானமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் மொடக்குபட்டி பாபு, ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர் விவேக், திருமலைச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சவுந்தர்ராஜன் (போடிப்பட்டி), பேச்சியம்மாள் (பெரியபட்டி), பரமேஸ்வரி (குறுஞ்சேரி), கலாவதி (சின்னவீரம்பட்டி), ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் மணியரசு, வீரம்மாள், அதிகாரிகள் சித்ரா, நாசர்அலி, செல்லமுத்து, லலிதா, மன்சூர், மோகன்ராஜ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
The post போடிப்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.