×

(தி.மலை) அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலை

திருவண்ணாமலை, மே 18: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையின் 13வது நாளான திரயோதசி திதியன்று நடைபெறும் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்புக்குரியது. அதன்படி, வைகாசி மாத பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடந்தது. அதையொட்டி, பிரதோஷ காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அண்ணாமலையார் கோயிலில் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்திக்கு விபூதி, மஞ்சள், பால் தயிர், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நந்திபகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, கோயில் 3ம் பிரகாரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பிரதோஷ நாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல், அண்ணாமலையார் கோயில் 4ம் பிரகாரத்தில் அமைந்துள்ள சிறிய நந்தி உள்ளிட்ட மற்ற நந்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post (தி.மலை) அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : T.Malai ,Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Th. Malai ,
× RELATED சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு...