×

வாலிபருக்கு கத்திக்குத்து: தொழிலாளி கைது

 

கோவை: கோவை ராமநாதபுரம் ஒலம்பசை சேர்ந்தவர் ராஜா (32). கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு தெரிந்த கவுண்டம்பாளையம் பிரபு நகரை சேர்ந்த தொழிலாளி தாஸ் (42) என்பவர் அங்கு வந்தார். அவர் ராஜாவிடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆவேசமடைந்த தாஸ், தகாத வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜாவை குத்தினார். பின்னர், அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றார். கத்திக்குத்தில் கன்னத்தில் காயமடைந்த ராஜாவை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, காட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வாலிபருக்கு கத்திக்குத்து: தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Raja ,Olambas, ,Ramanathapuram, Coimbatore ,Gandhipuram Central ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது