கோவை, மே 4: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் 13-ம் தேதி கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், மதுக்கரை, அன்னூர் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள் மற்றும் தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள் போன்ற வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுக்கொள்ளலாம்.
எனவே மேற்கண்ட வழக்குகளுக்கு தீர்வு காண கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு உடனடி தீர்வினை பெற்றுக்கொள்ளும்படி கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கோவை நீதிமன்றங்களில் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் appeared first on Dinakaran.
