×

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் 2 பேர் கைது

 

நிலக்கோட்டை, மே 3: திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். அச்சக உரிமையாளர். இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை, சின்னாளபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் விக்டோரியா மேரி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கேசவனை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் மாதர் சங்கத்தினர் அளித்த புகாரில் நேற்று இச்சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த பாபு (52)வையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pocso ,Nilakottai ,Kesavan ,Dindigul district ,
× RELATED சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த...