×

திருவண்ணாமலையில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய காவல் ரோந்து வானங்கள் * துல்லியமாக படம் பிடிக்கும் திறன் உள்ளது * எஸ்பி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை, மே 3: திருவண்ணாமலையில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட காவல் ரோந்து வாகனங்களை எஸ்பி கார்த்திகேயன் ெதாடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த பல்வேறு முயற்சிகள் மாவட்ட காவல்துறை மூலம் நடந்து வருகிறது. அதையொட்டி, மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் ₹60 லட்சம் மதிப்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட 10 காவல் ரோந்து வாகனங்களை நேற்று எஸ்பி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே நடந்த நிகழ்ச்சியில், நேற்று மாலை ரோந்து வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பி பழனி, டிஎஸ்பி குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு வாகனத்திலும் தலா ₹2 லட்சம் மதிப்பில் என மொத்தம் ₹20 லட்சம் மதிப்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்கள் பொருத்தப்பட்ட கண்காணிப்பு ரோந்து வாகனங்கள், கிரிவலப்பாதை, நகரின் முக்கிய சாலைகள், நகரையொட்டி அமைந்துள்ள சாலைகளில் 24 மணி நேரமும் பயணிக்கும். மேலும், தொலைவில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களையும், வானங்களில் பயணிப்போரையும் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்ட கேமிராக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கேமிராவில் பதிவாகும் காட்சிகளை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி ஆன்லைன் மூலம் கண்காணிக்கும் வசதியும் உள்ளது சிறப்பு அம்சமாகும்.

The post திருவண்ணாமலையில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய காவல் ரோந்து வானங்கள் * துல்லியமாக படம் பிடிக்கும் திறன் உள்ளது * எஸ்பி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,SP Karthikeyan ,Thiruvannamalai ,Tiruvannamalai.… ,
× RELATED வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை...