×

கடனை திருப்பி தராமல் மிரட்டல் எலக்ட்ரீஷியன் தற்கொலை

பெரம்பூர்: வியாசர்பாடி பெரியார் நகர், அழகர்சாமி மெயின் தெருவை சேர்ந்தவர் படவேட்டான் (54), எலக்ட்ரீஷியன். இவருக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. குடும்பத்துடன் பெரம்பூரில் வசித்து வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், தனது மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு, வந்தவாசியில் உள்ள தனது தாயாருடன் படவேட்டான் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வந்தவாசியில் இருந்து சென்னைக்கு வந்து, வியாசர்பாடி பெரியார் நகர் ராணியம்மையார் தெருவில் உள்ள தனது அண்ணன் சேட்டு என்பவரின் வீட்டில் தங்கிய படவேட்டான், நேற்று காலை படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த செம்பியம் போலீசார், படவேட்டான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், படவேட்டான் வந்தவாசியைச் சேர்ந்த செந்தாமரை என்பவருக்கு ரூ.2 லட்சம் கடன் கொடுத்ததாகவும், அதனை அவர் திருப்பித் தராமல் செந்தாமரை ஏமாற்றி வந்துள்ளார். இதுபற்றி கேட்டபோது, பணத்தை தரமுடியாது என மிரட்டியது தெரிய வந்தது. இதுகுறித்து படவேட்டான் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் வந்தவாசியைச் சேர்ந்த செந்தாமரை என்பவர் தன்னை மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கடனை திருப்பி தராமல் மிரட்டல் எலக்ட்ரீஷியன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Patavedan ,Alagarswamy Main Street, Vyasarpadi Periyar Nagar ,Dinakaran ,
× RELATED நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால்...