வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் ஏ குணசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் பிரதாபன், ஆணையாளர் கனிராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி பகுதியில் உள்ள வளர்ச்சி திட்டம் குறித்து நகராட்சி தலைவர் குணசேகரன் கூறினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-புகழூர் நகராட்சியில் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் ஒரு வருடத்திற்கு திடக்கழிவு மேலாண்மை பணிகளை வெளிக்கொணர்ணர்வு முகமை மூலம் பணிகள் மேற்கொள்ளுதல். கக்கன் காலனி ,ஓனவாக்கல்மேடு, ஹைஸ்கூல்வீதி, சுந்தராம்பாள்நகர், கந்தசாமிபாளையம், ராஜாநகர் ஆகிய தெருக்களில் ரூ.51.96 லட்சத்தில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை சீரமைப்பு செய்தல்.ரூ19.65 லட்சத்தில் முந்தைய டிஎன்பிஎல் புகழூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைத்தல்.
ரூ36.50 லட்சத்தில் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் பொருத்துதல்.ரூ2.50 லட்சத்தில் பகவதிஅம்மன் கோயில் தெருவில் மழைநீர் வடிகால், தரைப்பாலம் ,மராமத்து பணிகள் செய்தல், முல்லை நகரில் மழை நீர் வடிகால், பராமரிப்பு பணி செய்தல், வள்ளுவர் நகர் மெயின் பகுதியில் புதிதாக மழை நீர் வடிகால் சீரமைத்தல். ரூ.2.20 லட்சத்தில் மாரப்பாகாலனியில் மழை நீர் வடிகால் சீரமைத்தல்.ரூ8.15 லட்சத்தில் முல்லை நகரில் மழை நீர் வடிகால் அமைத்தல்.
ரூ.6.50 லட்சத்தில் செம்மடைப்பகுதியில் மழை நீர் வடிகால் சீரமைத்தல்.ரூ18 லட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக 9 எண்ணிக்கையிலான பேட்டரி மூலம் இயங்கும் தள்ளுவண்டிகள் வாங்குதல். ரூ.43.80 லட்சம் மதிப்பீட்டில் புகழூர் நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை பணிக்காக 6 எண்ணிக்கையிலான இலகுரக வாகனம் வாங்குதல் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post புகழூர் நகராட்சி பகுதியில் ரூ.4.22 கோடியில் திட்ட பணிக்கு ஒப்புதல் appeared first on Dinakaran.