×

முதியவரை தாக்கியவர் மீது வழக்கு

வேப்பூர், ஏப். 29: மங்கலம்பேட்டை அடுத்த வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் (66). இவருக்கும் உளுந்தூர்பேட்டை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜசேகர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி பரமசிவம் டி.மாவிடந்தல் அருகே சென்ற போது அங்கு வந்த ராஜசேகர், பரமசிவத்தை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதுகுறித்து வந்து புகாரையடுத்து மங்கலம்பேட்டை போலீசார் ராஜசேகர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post முதியவரை தாக்கியவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Veypur ,Paramasivam ,Valasai ,Mangalampet ,Perumbakkam village ,Ulundurpet ,Dinakaran ,
× RELATED பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது பைக்...