×

சிறுமி மாயம் போலீசில் புகார்

 

திருக்கோவிலூர், மே 6: திருக்கோவிலூர் அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி .இவர் கடந்த 29ம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை காணவில்லை. இது குறித்து சிறுமியின் தாய், திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வருகின்றனர்.

The post சிறுமி மாயம் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,
× RELATED திருக்கோவிலூர் அருகே மதுபானம் ஏற்றி...