சென்னை: சென்னையில் பாஜக பிரமுகர் பிபிஜி சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சங்கரின் பழைய மற்றும் புதிய எதிரிகளை அழைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தொழிற்சாலையில் கழிவு பொருட்கள் எடுப்பதில் நிலவிய போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கொலையில் ஸ்ரீபெரும்புதூர் சுயேட்சை கவுன்சிலர் சாந்தா, பட்டாபிராம் உதயாவுக்கு தொடர்பா என விசாரணை நடைபெற்று வருகிறது.
The post சென்னையில் பாஜக பிரமுகர் பிபிஜி சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 தனிப்படைகள் அமைப்பு..!! appeared first on Dinakaran.