×

கொடைக்கானல் அருகே குடிநீர் கோரி சாலை மறியல்

 

கொடைக்கானல், ஏப். 24: கொடைக்கானல் மேல்மலை பகுதியில் மன்னவனூர் கிராமம் உள்ளது. இப்பகுதியில் சில வாரங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மன்னவனூர் பிரதான சாலையில் காலி குடங்களுடன் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டம் குறித்த தகவலறிந்து வந்த கொடைக்கானல் நகர் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்ைத நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் செய்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post கொடைக்கானல் அருகே குடிநீர் கோரி சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Mannavanur ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் மன்னவனூர் வரையடி பகுதியில் செந்நாய் கடித்து மாடுகள் பலி..!!