- முஸ்லிம்கள்
- ரம்ஜான்
- புதுக்கோட்டை
- ஜமாத்துகள்
- திருவப்பூர் நவாப்
- எய்ட்கா தீடல்
- கன்மாய்
- புதுக்கோட்டை காவிநாத்
- ரமலான்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை கவிநாடு கண்மாய் அருகே உள்ள ஈத்கா திடலில் திருவப்பூர் நவாப் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இந்த தொழுகையில் கலந்து கொண்ட சிறுவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டது காண்பவர்களை கவர்ந்தது இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை நேற்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகைகள் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அடுத்த கவிநாடுகண்மாய் அருகே உள்ள ஈத்கா திடலில் திருவப்பூர் நவாப் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டு உலக நன்மைக்காகவும் ஒற்றுமைக்காகவும் நோய்நொடி நீங்க வேண்டும் என்று மன்றாடி துவா செய்தனர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட நிலையில். தொழுகையில் கலந்து கொண்ட சிறுவர்கள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி ரமலான் வாழ்த்துக்களை கூறியது காண்பவர்களை கவர்ந்தது.
The post புதுக்கோட்டையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை ஆரத்தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்த இஸ்லாமியர்கள் appeared first on Dinakaran.