×

அகிலாண்டபுரத்தில் சுகாதார துறை விழிப்புணர்வு கூட்டம்

பல்லடம்,ஏப்.18: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் வட்டார சுகாதார துறை மூலம் உகாயனூர் ஊராட்சிக்குட்பட்ட அகிலாண்டபுரம் கிராமத்தில் வெறிநாய்க்கடி தடுப்பூசி மற்றும் தெருநாய்கள் பெருக்கம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நாய்க்கடி தடுப்பூசி மற்றும் நாய்க்கடி ஏற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

மேலும் மிக வேகமாக பெருகி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த தமிழக அரசின் மூலம் நாய்களுக்கு செய்யப்படும் கருத்தடை சிகிச்சை பற்றியும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு போடப்படும் தடுப்பூசி பற்றியும் பொங்கலூர் கால்நடை மருத்துவர்கள் உமாசங்கர், ஜெகநாதன் ஆகியோர் விளக்கி கூறினர். இந்த நிகழ்வில் பொங்கலூர் வட்டார நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் ஜோதி, உகாயனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கனகராஜ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் கந்தசாமி செய்திருந்தார்.

The post அகிலாண்டபுரத்தில் சுகாதார துறை விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Akhilandapuram ,Palladam ,Ugayanur ,Pongalur ,health department ,Dinakaran ,
× RELATED பல்லடம் பெரியாயிபட்டி கிராமத்தில்...