×

நெல்ைல டவுனில் முன்விரோதத்தில்வாலிபரை கட்டையால் தாக்கிய 2 பேர் கைது

நெல்லை, ஏப். 18: நெல்லை டவுனில் முன்விரோத்தில் வாலிபரை கட்டையால் தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை பழைய பேட்டையைச் சேர்ந்தவர் வள்ளிநாயகம் (40). இவர் டவுன் கூலக்கடை பஜாரில் இரு சக்கர மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த புரோட்டா கடை உரிமையாளரான லாலுகாபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் (31) மற்றும் பாதுல் அஹமத் (36) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 15ம் தேதியன்று வள்ளிநாயகம் தனது கடை முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அப்துல்ரஹ்மான், பாதுல் அஹமத் ஆகிய இருவரும் அவரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதோடு கட்டையால் சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த வள்ளிநாயகத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்ைல அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு ெசய்த டவுன் போலீசார், கட்டையால் தாக்கிய அப்துல்ரஹ்மான், பாதுல் அஹமத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

The post நெல்ைல டவுனில் முன்விரோதத்தில்
வாலிபரை கட்டையால் தாக்கிய 2 பேர் கைது
appeared first on Dinakaran.

Tags : Nelayla Town ,Nellie ,Munviroth ,Nellie Town ,
× RELATED 7, 8ம்தேதி நடைபெற இருந்த உதவி...