×

(தி.மலை) மலைக்குறவர் மக்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்க வேண்டும்எம்எல்ஏ வேண்டுகோள்

செங்கம், ஏப்.18: மலைக்குறவர் மக்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்க வேண்டும் என சட்டமன்ற கூட்டத் தொடரில் எம்எல்ஏ மு.பெ.கிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கேள்வி நேரத்தின் போது, கலைஞர் ஆட்சியில் செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியிலும், திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட பகுதியிலும் மலைக்குறவர் மக்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்கப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மலைக்குறவர் மக்களுக்கு அடிப்படை தேவைகளான கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் போன்ற உரிமைகள் மறுக்கப்படுகிறது. மேலும் குரும்பர் இன மக்களுக்கும், லம்பாடி இன மக்களுக்கும் பழங்குடியினர் சான்று வழங்க தேவையான ஆய்வுகள் நடத்தப்பட்டு இதுவரை அவர்களுக்கு சான்று வழங்கப்படவில்லை. எனவே வாருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன், முதல்வர் மு.க.ஸ்டலினிடம் பேசி பழங்குடியினர் சான்றிதழ் வழங்க ஆவண செய்ய வேண்டும் என பேசினார்.

The post (தி.மலை) மலைக்குறவர் மக்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்க வேண்டும்
எம்எல்ஏ வேண்டுகோள்
appeared first on Dinakaran.

Tags : T.Malai ,MLA ,Sengam ,M. P. Giri ,T. Malai ,Dinakaran ,
× RELATED சமத்துவபுரம் அமையும் இடத்தில்...