×

முன்விரோத தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து

பண்ருட்டி, ஏப். 16: பண்ருட்டி அருகே காட்டாண்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பராயன் மகன் உக்கிரவேல் (44). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் கவுதம். இவர் பண்ருட்டியில் தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ படித்து வருகிறார். இருவருக்கும் தங்களது வீட்டுக்கு செல்லும் பொது வழி சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று உக்கிரவேல் தன்னுடைய வீட்டுக்கு அந்த வழியில் செல்லும் போது கவுதம் மற்றும் அவரது தம்பி சிவசாமி ஆகிய இருவரும் அவரை வழிமறித்து இந்த வழி உனக்கு சொந்தமில்லை,

இதில் ஏன் நீ வருகிறாய் என்று கேட்டுள்ளனர். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கவுதம், அவரது தம்பி சிவசாமி ஆகிய இருவரும் சேர்ந்து உக்கிரவேலை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் தலை மற்றும் கை, கால், வயிறு போன்ற பகுதிகளில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உக்கிரவேல் கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து கவுதமை கைது செய்தனர்.

The post முன்விரோத தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : Panruti ,Ukravel ,Subparayan ,Katandikuppam ,Dinakaran ,
× RELATED ஒரே சேலையில் தூக்குப்போட்டு கணவன், மனைவி தற்கொலை