×

கார் பேனட் மீது விழுந்த போலீசை ஒரு கிமீ இழுத்து சென்ற ரவுடி: பஞ்சாப்பில் பட்டப்பகலில் சம்பவம்

லூதியானா: பஞ்சாப்பில் போலீஸ் மீது காரை மோதி ஒரு கிமீ தூரம் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப், லூதியானாவில் டிராபிக் போலீசாக பணிபுரிபவர் ஹர்தீப் சிங். இவர் நகரின் முக்கிய சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு காரை நிறுத்தும்படி போலீஸ்காரர் ஹர்தீப் சிங் சைகை காட்டினார். ஆனால், காரில் இருந்தவர் காரை வேகமாக செலுத்தியுள்ளார். அப்போது ஹர்தீப் சிங் மீது கார் மோதியதில் அவர் பேனட் மீது விழுந்தார்.

அருகில் நின்றவர்கள் கூச்சல் போட்டனர். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் கார் வேகமாக சென்றது. ஒரு கிமீ தூரம் வரை அவர் காரில் இழுத்து செல்லப்பட்டார். நெரிசல் காரணமாக வேகம் குறைந்ததால் காரில் இருந்த போலீஸ்காரர் கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்தவர்கள் தப்பி சென்றனர்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘காரில் வந்த ரவுடிகள் 2 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’’ என்றார்.

The post கார் பேனட் மீது விழுந்த போலீசை ஒரு கிமீ இழுத்து சென்ற ரவுடி: பஞ்சாப்பில் பட்டப்பகலில் சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Punjab ,Ludhiana ,Dinakaran ,
× RELATED பஞ்சாபில் 4 மக்களவை தொகுதிகளில் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!