×

350 கிலோ இரும்பு கம்பியைதிருடிய வாலிபர் கைது

கிருஷ்ணகிரி, ஏப்.13: தர்மபுரி ராயல் நகரை சேர்ந்தவர் கிரி (48). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில், மக்கள் தொடர்பு அலுவலராக உள்ளார். இந்த கட்டுமான நிறுவனம் ராயக்கோட்டை அடுத்த டி.கொல்லப்பள்ளியில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அந்த பகுதியில் தளவாட பொருட்களை இருப்பில் வைத்திருந்தனர். நேற்று முன்தினம், அந்த பகுதிக்கு கிரி சென்ற போது, வாலிபர் ஒருவர் இரும்பு கம்பிகளை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தார். இதையடுத்து அவரை கையும், களவுமாக மடக்கிப்பிடித்து, ராயக்கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் ராயக்கோட்டை அடுத்த பழையூரைச் சேர்ந்த சூர்யா(25) என்பதும், ₹10 ஆயிரம் மதிப்பிலான 350 கிலோ இரும்பு கம்பிகளை திருடிச்செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சூர்யாவை கைது செய்த போலீசார், சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

The post 350 கிலோ இரும்பு கம்பியை
திருடிய வாலிபர் கைது
appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Giri ,Dharmapuri Royal Town ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்