கலசபாக்கம், ஏப்.12: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளையில் கைதான இரண்டு நபர்களை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள கலசபாக்கம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் ₹72.79 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை மூலம் தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்யப்பட்டவர்களில் வா ஹகித் என்கின்ற அப்ரிடி(36), சிராஜ் கான்(50) ஆகியோரை வேலூர் மத்திய சிறையில் இருந்து நேற்று பிற்பகல் கலசபாக்கம் நீதிமன்றத்தில் இருவரையும் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். இருவரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் போளூர் டிஎஸ்பி குமார் தலைமையில் போலீசார் இருவரையும் கலசபாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நேற்று மாலை விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
The post (தி.மலை) ஏடிஎம் கொள்ளையில் கைதான 2 பேருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த appeared first on Dinakaran.