×

நாசரேத் அருகே நெய்விளையில் கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைப்பு

நாசரேத், மார்ச் 25: தினகரன் செய்தி எதிரொலியாக நாசரேத் அருகே உள்ள நெய்விளையில் கிடப்பில் போடப்பட்டியிருந்த சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. நாசரேத் அருகே உள்ள நெய்விளையில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பள்ளிக்கூடம், ஆலயம் உள்ளது. இங்குள்ள கோயில் தெருவில் சாலையை சீரமைக்க கடந்த 3 மாதத்திற்கு முன்பே சாலை தோண்டி போடப்பட்டு கற்கள் சிதறி கிடந்த நிலையில் சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

இதனால் இப்பகுதி பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். வயதானோர் நடந்து செல்ல முடியாமல் தவித்தனர். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையே தொடர்ந்தன. எனவே கிடப்பில் போடப்பட்ட சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த ஜனவரி 11ம்தேதி தினகரனில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாக நெய்விளை கோயில் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள், மாணவ- மாணவிகள் மகிழ்ச்சியடைந்த உள்ளதோடு செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags : Neivlai ,Nazareth ,
× RELATED வங்கி ஊழியரை மிரட்டி நகை, செல்போன் பறிப்பு அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது