×

தரகம்பட்டி அருகே வரவனையில் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்

தோகைமலை, மார்ச் 14: கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே வரவனை ஊராட்சி சார்பாக பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்துடன் இணைந்து பொதுமக்களுக்கான இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடந்தது.
வரவனையில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடந்த சிறப்பு கண் சிகிச்சை முகாமை ஊராட்சி மன்ற தலைவத் கந்தசாமி தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் தன்னார்வலர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வரவனை ஊராட்சி கிராமங்களில் இருந்து வந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு திருச்சி தனியார் கண் மருத்துவ மனையின் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு விழித்திரை நோய்களுக்கான அறுவை சிகிச்சைகள், குழந்தைகளுக்கான கண்புரை அறுவை சிகிச்சைகள், விட்ரெக்டமி அறுவைச் சிகிச்சை, விழித்திரை விலகல் அறுவை சிகிச்சைகள், கண் இரைப்பை (மூடுதல்) நீக்குதல் அறுவை சிகிச்சைகள் என்று முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டது.

இதேபோல் 30 பேருக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது. இந்த முகாமில் ஊராட்சி மன்ற செயலாளர் வீராச்சாமி, பசுமைக்குடி தன்னார்வலர்கள் கவிநேசன், காளிமுத்து, செந்தமிழ்செல்வன், கருப்பையா உள்பட ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Varavana ,Dharagambatti ,
× RELATED தரகம்பட்டி அருகே பண்ணப்பட்டியில்...