×

மதுரை வீரன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

ஓமலூர்: ஓமலூர் அருகே மாட்டுக்காரனூரில் மதுரை வீரன், செல்வகணபதி, மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  ஓமலூர் அருகே மாட்டுக்காரனூர் கிராமத்தில் நூறாண்டு பழமை வாய்ந்த மதுரை வீரன் கோயில், செல்வகணபதி மற்றும் மகா மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களை கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைப்பு செய்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் பெருமாள் கோயிலில் இருந்து தீர்த்த்குட ஊர்வலம் எடுத்து வரப்பட்டு, யாக பூஜைகள் நடந்தது.  இதையடுத்து நேற்று காலை, யாக சாலையில் இருந்து தீர்த்த குடங்கள் கோயிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. மகா மாரியம்மன் கும்பத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மதுரை வீரன் சாமிக்கு யாக குண்டத்தில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. விழாவில் ஓமலூர் வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Madurai Veeran ,Mariamman Temple ,Kumbabhishek ,
× RELATED சீர்காழி அருகே சட்டநாதபுரம் சந்தன மாரியம்மன் கோயிலில் காவடி திருவிழா