செய்யாறு, மார்ச் 8: செய்யாறு அருகே பைக்கை மறித்து மயக்க பொடி தூவி விவசாயியிடம் ₹31 ஆயிரம் பறித்து சென்ற, காரில் வந்த 3 திருநங்கைகளை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம்(63), விவசாயி. இவர் தனது வீட்டை பழுதுபார்க்க வெம்பாக்கத்தில் உள்ள வங்கியில் நகை அடகு வைத்து வங்கி கணக்கில் இருந்து ₹1 லட்சத்தை எடுத்துக் கொண்டு உறவினர் ஆறுமுகம் என்பவரது பைக்கில் நேற்று முன்தினம் கிராமத்திற்கு புறப்பட்டார்.