ஐயப்பன் எம்எல்ஏ பிறந்தநாள் விழா கவுன்சிலர் பிரகாஷ் நேரில் வாழ்த்து

கடலூர், மார்ச் 5:    கடலூர் தொகுதி எம்எல்ஏ ஐயப்பன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி 3வது வார்டு சார்பில் தி.மு.க. கவுன்சிலர், கடலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில் ஐயப்பன் எம்.எல்.ஏவுக்கு மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக ஐயப்பன் எம்.எல்.ஏ நலன் வேண்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏழை, எளியோருக்கு நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கடலூர் மூன்றாவது வார்டு ராமலிங்கம், விஜயகுமார், தெய்வநாயகம், முருகன், பாஸ்கர், அஷ்ரப் அலி, மணிகண்டன், பாலசந்தர், சதிஷ், ஆனந்த், சதாசிவம்,

மணிவண்ணன், செந்தில், விஜி, வசந்த், சிலம்பு மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஐயப்பன் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஞானபிரகாசம், மனோகர், முத்து, பிரகாஷ், கனகராஜ், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் மேலாண் இயக்குனர் கேஜிஎஸ் தினகரன், கவுன்சிலர் சரத், தொழிலதிபர் உமாச்சந்திரன், ஊராட்சி துணைத் தலைவர் சாந்தி பழனிவேல், கவுன்சிலர் கர்ணன், ஓட்டுநர் பயிற்சி பள்ளி ரஷீத், சன்ரைட் பிரகாஷ், பகுதி செயலாளர் சலீம், முன்னாள் தலைவர் ஜெயமூர்த்தி, சுதாகர், எல்ஐசி வேணு உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories:

கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு புதுச்சேரி, மே 22: கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை வேதனையுடன் தெரிவித்தார். ஜி20 தலைமை பொறுப்பில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட ஜி20 நாடுகளில் நேற்று கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. நீடித்த, நிலையான கடல்சார் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் கடல்சார் மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கான தீர்வுகளை கண்டறியவும், இதுதொடர்பாக ஜி20 நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அனைத்து கடல்சார் மாநிலங்களிலும் கடற்கரைத் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை மற்றும் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது:நிலத்திலிருந்து கழிவுகளை அப்புறப்படுத்த கடலில் கொட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது கடலில் கொட்டப்படும் கழிவுகள் மீன்களின் உணவுக்காக மாறி பின்பு நாமே மீன்களை உண்கிறோம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல, கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகின்றன. தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே சுகாதார கேட்டினால் ஏற்படும் நோய்களை தடுத்ததன் மூலம் கிட்டத்தட்ட ரூ.60 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சார்ந்த மாநிலம். எனவே, புதுச்சேரியில் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிச்சயமாக கொண்டு வர வேண்டும். கடலை சுத்தப்படுத்துவதன் மூலமாக நமது குடலும் சுத்தப்படுத்தப்படுகிறது. நிச்சயமாக இது இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, கவர்னர் உறுதிமொழி வாசிக்க, அதனை அனைவரும் ஏற்றனர். தொடர்ந்து, தேசிய மாணவர் படை மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நடைபயணம் மற்றும் பேரணியை கவர்னர் தொடங்கி வைத்தார். மேலும், சுற்றுச்சூழல் குறித்த பேச்சு, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். சபாநாயகர் செல்வம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் முத்தம்மா, இயக்குநர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.