×

கார் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது

விக்கிரவாண்டி, ஜூலை 24: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் கார் கண்ணாடியை உடைத்த வழக்கில் 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 பேரை போலீசார் கைது செய்தனர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் போது கடந்த 1ம் தேதியன்று காணை ஒன்றியம் அத்தியூர் திருக்கையில் பாமக மாநில தலைவர் அன்புமணி பிரசாரத்துக்கு வந்த போது திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். திமுக தேர்தல் பிரசார அலுவலகத்திலிருந்த சேர்களையும் உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார், இரு வழக்குகள் பதிந்து தேர்தல் காரணமாக வழக்கு விசாரணை நிலுவையிலிருந்தது. இந்நிலையில் அத்தியூர் திருக்கையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அத்தியூர் திருக்கையை சேர்ந்த இளங்கோவன் (48), திருநாவுக்கரசு (36) ஆகிய இருவரையும் கைது செய்து காவலில் வைத்தனர்.

The post கார் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Wickrandy ,Wickrandi ,Vikrawandi ,Land Union ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டியில் வருகிற 23ம் தேதி...