×

தியாகதுருகம் அருகே கல்லூரி மாணவி மாயம்

தியாகதுருகம், ஜூலை 24: தியாகதுருகம் அடுத்த சூ.பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி மணிமேகலை (41). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் விஜயலட்சுமி (20) தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ம் தேதியன்று வழக்கம் போல் இரவு உணவு அருந்திவிட்டு படுக்க சென்றார். பின்னர் மறுநாள் காலையில் அவரை காணவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தோழிகளிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

The post தியாகதுருகம் அருகே கல்லூரி மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Thiagathurugam ,Thyagathurugam ,Anbazhagan ,Manimekalai ,Palapattu village ,Vijayalakshmi ,
× RELATED காலாப்பட்டு அருகே ஆண் நண்பர்களுடன் கடலில் குளித்த உ.பி. மாணவி மாயம்