×

மல்லாங்கிணறு பேரூராட்சியில் புதிய சாலைகள் அமைக்க ₹1.20 கோடி நிதி ஒதுக்கீடு


அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் காரியாபட்டி: மல்லாங்கிணறு பேரூராட்சியில் புதியசாலைகள் அமைக்க ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக பேரூராட்சி சேர்மன் துளசிதாஸ் தலைமை வகித்தார், துணை சேர்மன் மிக்கேலம்மாள், செயல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், உதயசெல்வி, அழகு, அனிதா, பாலச்சந்திரன், புகழேந்திரன், ராஜேஸ்வரி, மகாலிங்கம், கருப்பையா, செல்வராஜ், சுமதி, போஸ்ஜெயசந்திரன், வைஷ்ணவி உட்பட அனைத்து பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்குவது, மேலும் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தி ஊரணிகள் குளங்கள் தூர்வாரப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்துவது, அய்யன் ரெட்டியப்பட்டி பிரதான சாலை அமைக்க 73 லட்சம், பல வேலைக்காரனர் தெருவில் சாலை 50 இலட்சம் ஆகியவற்றில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நிதி ஒதுக்க பரிந்துரை செய்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியதோடு, அவரது ஆலோசனைப்படி விரைந்து செயல்படுத்துவோம் என பேரூராட்சி சேர்மன் துளசிதாஸ் கூட்டத்தில் தெரிவித்தார். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்பது உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Mallanginaru ,
× RELATED விருதுநகர்-மல்லாங்கிணறு சாலையில்...