தொண்டாமுத்தூர், பிப்.22: கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்கள் மீதான பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களின் ஆணையை திரும்ப பெற வேண்டும். மாணவர்கள் மீதான புகாரை விசாரிக்கும் விசாரணை குழுவில், மாணவர்கள் இருக்க வேண்டும். இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் மீது இதைக் காரணம் காட்டி எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என கோஷமிட்டனர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.