×

அறுவடை பணி துவங்கியுள்ள நிலையில் சுரண்டை, வீராணம், சுந்தரபாண்டியபுரம் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் கலெக்டரிடம் பழனி நாடார் எம்எல்ஏ கோரிக்கை

சுரண்டை,பிப்.21: இந்தாண்டுக்கான நெல் அறுவடை பணிகள் தற்போது துவங்கியுள்ள நிலையில் தென்காசி தொகுதிக்கு உட்பட்ட சுரண்டை, வீராணம், சுந்தரபாண்டியபுரம் பகுதிகளில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கலெக்டரிடம், பழனி நாடார் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தென்காசி கலெக்டர் துரை ரவிச்சந்திரனிடம் பழனி நாடார் எம்எல்ஏ அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீராணம், சுரண்டை மற்றும் சுந்தரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது.

இந்த பகுதிகளில் விவசாயம் தான் பிரதான தொழில் ஆகும். இந்தாண்டுக்கான நெல் அறுவடை பணிகள் தற்போது துவங்கியுள்ளபோதும் இதுவரை நெல் கொள்முதல் நிலையம் ஆரம்பிக்கப்படவில்லை. எனவே விவசாயிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு சுரண்டை, வீராணம், சுந்தரபாண்டியபுரம் பகுதிகளில் விரைவாக தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க ஆணை பிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Palani Nadar MLA ,Surantai ,Viranam ,Sundarapandiapuram ,
× RELATED கீழ வெள்ளகால் ஊராட்சி அலுவலக புதிய...