×

நத்தத்தில் காங்கிரசார் நடைபயணம் துவக்கம்

நத்தம், ஆக. 10:  நாட்டின் 75வது சுதந்திர தின துவக்க விழா கொண்டாடும் வகையிலும், உணவு பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்திற்கு காரணமான மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்தும் நத்தத்தில் 75 கிமீ நடை பயணத்தை காங்கிரஸ் கட்சியினர் நேற்று துவக்கினர். முன்னதாக நத்தம் காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனி ராஜா தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து நடைபயணத்தை துவக்கினர். இதில் நகர தலைவர் முகமது அலி,  வட்டார தலைவர்கள் பழனியப்பன், செல்வம், ராஜ்கபூர், ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் அழகர்சாமி, ஜின்னா சித்திக், பாக்கியம், வேணுகோபால், தொழிற்சங்கத்தினர் கருப்பையா, உமா உள்பட 150க்கும் மேற்பட்ேடார் காந்தி குல்லா அணிந்து  நடை பயணத்தின் நோக்கம் குறித்த பதாகையுடன் சென்றனர். நேற்று நத்தத்திலிருந்து புறப்பட்ட நடைபயணம் சாணார்பட்டி, திண்டுக்கல், நிலக்கோட்டை  வழியாக  ரெட்டியார்சத்திரம் வரை 75 கிமீ சென்று அங்கு நிறைவடைகிறது.

Tags : Inauguration ,Congress ,Nadda ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...