×

பள்ளி மாணவியை கடத்திய 3 பேர் போக்சோவில் கைது

மேச்சேரி, ஏப்.28:  தாரமங்கலம் அருகே டி.கோனகாபாடி பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (39), லாரி டிரைவர். இவரது மூத்த மகள், கேஆர் தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில், லோகநாதன், அவரது நண்பர் மணி ஆகியோர், மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை போக்சோவில் கைது செய்தனர். இதேபோல், ராமிரெட்டிபட்டி, பூனையான்வளவு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (38), கல் உடைக்கும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராதா (35). இவர்களது மகள் மேச்சேரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை சிந்தாமணியூரைச் சேர்ந்த செல்வம் மகன் ராஜேந்திரபிரசாத் என்பவர், ஆசைவார்த்தை கூறி, கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து ராதா கொடுத்த புகாரின் பேரில், தாரமங்கலம் போலீசார், ராஜேந்திர பிரசாத் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags : Bokso ,
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது