×

கைதி மரணம் சிபிசிஐடி விசாரணை

பெரம்பூர்: கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் கஞ்சா, பட்டா கத்தியுடன் வந்ததாக சுரேஷ், விக்னேஷ் போலீசார் கைது செய்தனர். பிறகு அயனாவரம், தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரித்தபோது விக்னேசுக்கு வலிப்பு ஏற்பட்டதால் இறந்ததாக கூறப்பட்டது. விக்னேஷ் மரணம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், தலைமை செயலக காலனி போலீஸ்காரர் பொன்ராஜ் மற்றும் ஊர்க்காவல்படையை சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி சரவணன் நியமிக்கப்பட்டார். சிபிசிஐடி போலீசார், நேற்று 2வது நாளாக தலைமை செயலக காலனி காவல் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர். விக்னேஷ் கைது செய்யப்பட்டதற்கான முக்கிய ஆவணத்தை எடுத்து சென்றனர். தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர்.

Tags : CPCIT ,
× RELATED சயானிடம் சிபிசிஐடி போலீசார் 8மணி நேரம் விசாரணை