×

வலங்கைமான் விருப்பாச்சிபுரத்தில் நடந்த தனியார் ேவலைவாய்ப்பு முகாமில் 122 பேருக்கு பணி நியமன ஆணை

வலங்கைமான், ஏப். 2: வலங்கைமான் அடுத்த விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் மகளிர் திட்டம் மூலம் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 122 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை ஒன்றிய குழு உறுப்பினர் அன்பரசன் வழங்கினார்.
வலங்கைமான் அடுத்த விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளை ஒருங்கிணைந்து மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் லேகா தமிழ்ச்செல்வன் ஆலோசனையின்பேரில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் தில்லைமணி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் சிவனேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஒன்றிய குழு உறுப்பினர் அன்பரசன் கலந்து கொண்டு 122 நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும் இருபத்தி மூன்று நபர்கள் இரண்டாம் நிலை தேர்வாளர் காத்திருப்பு பட்டியலில் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இலவச திறன் வளர்ப்பு பயிற்சிக்கு சுமார் 50க்கும் மேற்பட்டோர் தங்களது பெயரினை பதிவு செய்துள்ளனர்.
இவ் முகாமினை ஒருங்கிணைந்து வருகை புரிந்தவர்களுக்கு மகளிர் திட்ட வட்டார மேலாளர் தனலட்சுமி நன்றி கூறினார் . நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கீர்த்திவாசன், விருப்பாச்சிபுரம் திமுக கிளைச் செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Valangaiman Virupachchipuram ,
× RELATED பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி...