×

எல்லை பிடாரி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

கடலூர், ஏப். 2: கடலூர் முதுநகர் அருகே உள்ள தியாகவல்லியில் எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அதன்படி அமாவாசையான நேற்றுமுன்தினம் சாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு அம்மன், சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து கோயிலை சுற்றி உலா வந்து, பின்னர் ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டு, இரவு முழுவதும் பூசாரிகள் தாலாட்டு பாடினர். இதையடுத்து பக்தர்கள் எலுமிச்சம் பழத்தில் சூடம் ஏற்றி வழிபட்டனர். ஊஞ்சல் உற்சவத்தை ஒட்டி பக்தர்கள் அம்மன் மற்றும் காளி வேடமிட்டு நடனமாடினர்.

Tags : Swing festival ,Ellai Bidari Amman Temple ,
× RELATED திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி...