×

வெள்ளியணை அருகே விபத்து சைக்கிளில் சென்ற முதியவர் வாகனம் மோதி பலி

கரூர், மார்ச்24:  கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள பொரணி பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன்(67). தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார்.இவர் கடந்த 22ம்தேதி மாலை சைக்கிளில் கரூர் சாலை புதுக்கஞ்சமனு£ர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இந்த விபத்து சம்பவம் குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Velliyana ,
× RELATED வெள்ளியணை அருகே பரிதாபம் குளத்தில்...