×

சந்தூரில் எருது விடும் விழா

கிருஷ்ணகிரி, மார்ச் 10: கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூரில் நடந்த எருது விடும் திருவிழாவில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா சந்தூர் கிராமத்தில் நேற்று 5வது ஆண்டு எருதுவிடும் விழா நடந்தது. இதில், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்க அழைத்து வரப்பட்ட காளைகளை, கால்நடைத்துறை உதவி இயக்குநர் முரளிசதானந்தம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதித்து அனுமதி வழங்கினர். சில காளைகளை போட்டியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை.

Tags : Bullfighting ,Chandur ,
× RELATED சந்தூரில் அரசு பஸ் மீது டிராக்டர் மோதல்