×

பெ.நா.பாளையம் பேரூராட்சி தலைவராக விஷ்வபிரகாஷ் (திமுக) தேர்வு

கோவை, மார்ச் 5:  கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 14 பேரும், அதிமுக வேட்பாளர்கள் 4 பேரும் வெற்றி பெற்றனர். தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் தேர்தல் அதிகாரி ஜெசிமாபானு தலைமையில் நடந்தது. இதில் திமுக கவுன்சிலர் விஷ்வபிரகாஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் உமா தேவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags : Vishwaprakash ,DMK ,BN Palayam ,
× RELATED மாநகர் மாவட்ட திமுக சார்பில் மக்களின்...