×

சேத்தியாத்தோப்பு புதிய பாலத்தில் சோலார் விளக்குகள் சேதம்

சேத்தியாத்தோப்பு, பிப். 22: சேத்தியாத்தோப்பு புதிய பாலம் கட்டப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பாலத்தின் மையபகுதியில் விரிசல் விட்டு வருகின்றது. இந்நிலையில் பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த சோலார் விளக்குகள் சேதமாகி கம்பம் மட்டுமே எஞ்சியுள்ளது. இதில் ஒருசில கம்பங்களை காணவில்லை என கூறப்படுகின்றது. சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அள்ளூர் கிராம பொதுமக்கள் வாரச்சந்தை மற்றும் வெளியூர்களுக்கு செல்லவும், அத்தியாவசிய தேவைகளுக்கும் சேத்தியாத்தோப்பு நகர பகுதிக்கு வரவேண்டிய நிலை உள்ளதால் பாலத்தை கடந்துதான் வரவேண்டும். பாலத்தின் இருபுறமும் இருந்த சோலார் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சேதமடைந்து எரியாமல் உள்ள சோலார் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chetiyathoppu ,
× RELATED சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் லஞ்ச...