×

எஸ்.எல்.பி.பள்ளியில் வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கும் அறை தயார்

நாகர்கோவில், பிப். 17: நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எஸ்எல்பி அரசு பள்ளியில் எண்ணப்படுகிறது. இதனையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை  வைக்கும் அறை தயாராகி வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 233 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுகள் நடக்கிறது.  நாகர்கோவிலில் எஸ்எல்பி அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள  மையத்தில்  வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையத்தில் ஆயத்த பணிகள்  முழுவீச்சில் நடந்து வருகிறது.2 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.தற்போது வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. வேட்பாளர்கள்,  ஏஜெண்டுகள் நின்று வாக்கு விவரங்களை பார்க்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு  இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தில் வைப்பதற்காக 4 அறைகள் தயார் செய்யப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் இடங்களில் அடையாளக் குறி எழுதப்பட்டுள்ளது.  அறையை சுற்றி பாதுகாப்பாக பலகையால் தடுப்புகள் அமைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் நடந்து வரும் அனைத்து பணிகளையும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

Tags : SLP ,School ,
× RELATED மே 31-க்குள் பள்ளிகளுக்கு நோட்டு,...