×

ஆ.ராசா எம்பி தகவல் ஆண்டிமடம் பகுதியில் வேளாண்மை திட்டங்கள் குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி

ஆண்டிமடம், பிப்.11: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வேளாண்மை துறையின் சார்பாக அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை மற்றும் இதர துறையினரின் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கிராமிய கலை குழுவினர் வல்லம், அய்யூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நெல் தரிசில் உளுந்து சாகுபடியின் அவசியம் மற்றும் சாகுபடி தொழில்நுட்பம் குறித்தும், பயிர் காப்பீடு, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் முதலிய பல்வேறு திட்டங்கள் குறித்து கலைக்குழுவினர் மூலம் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஐயோ வல்லம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு உதவி வேளாண்மை அலுவலர், மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags : A.Rasa ,Andimadam Area ,
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது